Home

About Books
Third slide
சில நேரங்களில் சில மனிதர்கள் - எழுத்தாளர் ஜெயகாந்தனின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். Anti-Brahminism நாவல் என்று சர்ச்சைக்கும் உள்ளானது. அதே பெயரில் படமாக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றது.
Third slide
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
Third slide
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். இது சோழரின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானை கதைத் தலைவனாகக் கொண்ட புதினமாகும். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர். கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.
Third slide
இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான். வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான். தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை.
Third slide
கருணாமிர்த சாகரம் முத்தமிழ் அல்லது மொழி இசை மற்றும் நாடகத்தின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான இசை அல்லது இசைத்தமிழ் பற்றிய ஒரு கட்டுரை.
Third slide
இந்த கதையில் ஜெர்மன் பேராசிரியர் ஓட்டோ லிடன்ப்ராக், பூமியின் மையத்தை நோக்கி எரிமலைக் குழாய்கள் இருப்பதாக நம்புகிறார். அவர், அவரது மருமகன் ஆக்செல் மற்றும் அவர்களின் வழிகாட்டி ஹான்ஸ் ஆகியோர் ஐஸ்லாந்திய எரிமலை ஸ்னஃபெல்ஸ்ஜாகுலில் இறங்குகிறார்கள், வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள் மற்றும் இயற்கை ஆபத்துகள் உட்பட பல சாகசங்களை எதிர்கொள்கின்றனர். இறுதியில் தெற்கு இத்தாலியில், ஸ்ட்ரோம்போலி எரிமலையில் மேற்பரப்புக்கு வருகிறார்கள்.
Third slide
வாழ்க்கை வாழ்வதற்கே. எப்படியும் வாழலாம் என்று இல்லாது இப்படித்தான் வாழப்போகிறேன் என்று எண்ணி வாழ்வோர் குறைவே. என்னை நான் அறிந்து என்னை அன்பு செய்யப்போகிறேன் என்ற அவா எனக்குள் புத்துயிரைத் தருகிறது. மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக வேண்டுமானால், அவனது வாழ்வில் எத்தனை பேர்களுடன் உண்மையான அன்பு கொண்டுள்ளான் என்பதைப் பொறுத்திருக்கிறது.
Third slide
கிருஷ்ணமூர்த்தியின் போதனைகளின் இந்த விரிவான பதிவு சிறந்த தத்துவஞானியின் சிந்தனைக்கு ஒரு சிறந்த, பரந்த அறிமுகமாகும்.
Third slide
ஒழுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆட்சி முறைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படும் செயல் அல்லது செயலற்ற தன்மை. மனித மற்றும் விலங்குகளின் நடத்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுக்கம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும், இது ஒவ்வொரு செயல்பாடு-கிளைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடு, அறிவு மற்றும் பிற ஆய்வு மற்றும் அவதானிப்புத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒழுக்கம் என்பது சுய, குழுக்கள், வகுப்புகள், துறைகள், தொழில்கள் அல்லது சமூகங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஆளும் நிறுவனத்திற்கும் தேவைப்படும் எதிர்பார்ப்புகளின் தொகுப்பாகும்.
Welcome To Tamil Bookshelf
Read Beautiful Rich Media eBooks In Tamil Bookshelf

READ CHRISTIAN BOOKS TAMIL

Christian Books, Bible Study, Bible Stories, Bible Comics, Audio Bible.

READ STORY BOOKS TAMIL

Adventure, Fiction, Historical Fiction, Poetry, Philosophy and More.

READ STORY BOOKS ENGLISH

On this page, you’ll find suggestions for excellent English books.

Why is it important to read books?

Reading is important because it develops our thoughts, gives us endless knowledge and lessons while keeping our minds active. Books can hold and keep all kinds of information, stories, thoughts and feelings unlike anything else in this world. The importance of a book to help us learn and understand things cannot be underestimated.

Can words, paragraphs, and fictional worlds be all that great for you and your health? It definitely can, and reading is a timeless form of entertainment and information.

These eBooks can be read without checkouts or holds. The goal of Tamil Bookshelf is to encourage a love of reading and serve as a gateway to reader reading even more often, whether in school, at libraries.

சமீபத்தில் சேர்க்கப்பட்ட புத்தகங்கள்



சிறுவர் கதைகள்

சிறுவர்களுக்கு நன்னெறி போதிக்கும் எத்தனையோ விஷயங்கள் நமது இலக்கியங்களில் உள்ளன. குறளில் சொல்லாத கருத்துக்களே இல்லை எனலாம். அவற்றை சிறு கதைகள் மூலம் சொல்வதால் குழந்தைகளின் மனதில் எளிதாக பதியும்.

சிறுவர் கதைகள்



சிறுகதைகள்

தமிழ் சிறுகதை இலக்கிய வடிவ வளர்ச்சி மட்டுமே, உலகின் மற்ற மொழி சிறுகதை இலக்கியங்களுக்கு நிகராக உள்ளது. ஏனைய பிற இலக்கியம் வடிவங்கள் தமிழில் பின்தங்கியே உள்ளதென்று, உலக ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல் சிறுகதை என்பார்கள். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும்.

சிறுகதைகள்



வரலாற்றுப் புத்தகங்கள்

வரலாறு என்பதை நாம், மன்னர்களின் வெற்றிச் சரித்திரமாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறான எண்ணம். மக்களின் வாழ்க்கையும், பண்பாட்டு மாற்றங்களும், பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்ததுதான் முழுமையான வரலாறு. நிலப்பரப்பளவில் ஒப்பிட, இந்தியா சிறிய தேசமாக இருக்கலாம். ஆனால் பண்பாட்டில் உலகுக்கே வழிகாட்டும் நாடு.

வரலாற்றுப் புத்தகங்கள்



சரித்திர நாவல்கள்

தமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான மோகனாங்கியை (1895) எழுதியவர் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவராவார். தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் கல்கி ஆவார். இதனால் இவர் தமிழ் வரலாற்றுப் புதினங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவர் எழுதி "கல்கி" வார இதழில் தொடர்கதைகளாக வெளிவந்த பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய புதினங்கள் பெயர்பெற்றவை. இவரைத் தொடர்ந்து, அகிலன், நா. பார்த்தசாரதி, செகசிற்பியன், கோவி. மணிசேகரன், சாண்டில்யன் போன்ற பல எழுத்தாளர்கள் தமிழில் வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யன், குமுதம் வார இதழ் மூலம் பல வரலாற்றுப் புதினங்களைத் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். கடல் புறா, யவனராணி, ராஜமுத்திரை போன்ற இவரது புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.

சரித்திர நாவல்கள்



தமிழ் இலக்கிய புத்தகங்கள்

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

தமிழ் இலக்கிய புத்தகங்கள்



ENGLISH BOOKS

On this page, you’ll find suggestions for excellent English books. Reading novels is awesome; you get to be immersed in an imaginative world. Novels have a wide range of words that describe places, objects, characters, emotions, actions, etc.



COMMON TOPICS

The common ground between library science and information science, which is a strong one, is in the sharing of their social role and in their general concern with the problems of effective utilization of graphic records.

But there are also very significant differences in several critical respects, among them in:
(1) selection of problems addressed and in the way they were defined;
(2) theoretical questions asked and frameworks established;
(3) the nature and degree of experimentation and empirical development and the resulting practical knowledge/competencies derived;
(4) tools and approaches used; and
(5) the nature and strength of interdisciplinary relations established and the dependence of the progress and evolution of interdisciplinary approaches.
All of these differences warrant the conclusion that librarianship and information science are two different fields in a strong interdisciplinary relation, rather than one and the same field, or one being a special case of the other.



தமிழ் மின் புத்தகங்கள்

இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள், தாளில் அச்சிட்டு, கட்டுமானம் செய்து தயாரிக்கப்படுகின்றன. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்திகளைப் போலவே கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் இடம் பெறச் செய்து அதை இணைய வழியில் படிக்கும் படியாக மின்புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்திலிருந்து இதனைப் தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது படிக்கும் நிலையிலும் மின் புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன.


TAMIL BOOKSHELF





Tamil Bookshelf
பரிசுத்த வேதாகமம்

Popular posts from this blog